இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 18, 2017

மரம் ... ! வரும்காலத்தின் உரம் ... !!

891)
ஆளுக்கு ஒருமரம் நட்டு;வரும் நீர்தேக்க
ஊருக்கு ஒருகுளம் வெட்டு


892)
அறம்வளர்க்க அப்புறம் பார்ப்போம்; முதலில்
மரம்வளர்க்க முன்வரப் பார்


893)
சொன்னால் குளம்வெட்ட ஆளில்லை, தன்னால்
மரம்வெட்டா நாளில்லை ஆம்


894)
மரம்வைத்தால் கேலிசெய்யும் பார்,மரம் வெட்ட
வருவோர்க்குக் கூலிதரும் பார்


895)
மதம்வளர்க்க ஏங்கும் மனிதன், மரம்வளர்க்க
வந்தால்தான் ஓங்கும் உலகு

No comments: