ஆளுக்கு ஒருமரம் நட்டு;வரும் நீர்தேக்க
ஊருக்கு ஒருகுளம் வெட்டு
892)
அறம்வளர்க்க அப்புறம் பார்ப்போம்; முதலில்
மரம்வளர்க்க முன்வரப் பார்
893)
சொன்னால் குளம்வெட்ட ஆளில்லை, தன்னால்
மரம்வெட்டா நாளில்லை ஆம்
894)
மரம்வைத்தால் கேலிசெய்யும் பார்,மரம் வெட்ட
வருவோர்க்குக் கூலிதரும் பார்
895)
மதம்வளர்க்க ஏங்கும் மனிதன், மரம்வளர்க்க
வந்தால்தான் ஓங்கும் உலகு
Tweet | |||||
No comments:
Post a Comment