இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 22, 2017

மாதம் பத்து ....!

906)
சிப்பிக்குள் முத்தாகப் பொத்திவைத்த சொத்தடையக்
காத்திருக்கும் மாதமது பத்து


907)
வரும்முதலில் வாந்தி இரண்டில் அதிமகிழ்ச்சி
மூன்றில் மிகமயக்கம் தான்


908)
நான்கில் புளிப்பெடுக்கும் ஐந்தில் தலைவலிக்கும்
ஆறில் சொடுக்கும் வயிறு


909)
ஏழில் வலைகுலுங்க எட்டில் எழும்சோர்வால்
ஒன்பதில் நீளும் பயம்


910)
பத்துதெல்லாம் சாவோடு சூதாடி தாயமிட்டுப்
பெற்றெடுப்பாள் தன்சேயை தாய்

No comments: