961)
வந்தான் அரக்கன் மயில்உருவில். கந்தன்
கவனம் கவண்அரு கில்
(கவண் – கவட்டை, ஆயுதம்)
[
962)
வாழ்நாளில் ஆநெய்க்கு முன்காலம், பூநெய்க்குப்
பின்காலம் தந்தோர்க்கு வாழ்வு
(ஆநெய்=பசுநெய், பூநெய்=தேன்)
[
963)
தேர்ந்தெடுத்துப் பந்திக்க முந்து, சேர்ந்தபின்
படைக்கச் சிலகாலம் பிந்து,
(பந்திக்க – இணைபார்க்க, படைக்க – குழந்தைபெற)
[
964)
களவும் கவறு(ம்) அற,அதற்குக் கற்றக்
களவோடு கத்து மற
(கவறு – சூது, அற - தவிர், கத்து – பொய், கயமை )
[
965)
ஆடியில் வீசும் அடர்காற்று பட்டவுடன்
அம்மை* பறந்து விடும்
(*நோய்)
[>
Tweet | |||||
No comments:
Post a Comment