இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 12, 2017

நபிமொழி - 21 :- நீர் மேலாண்மை..!


என்குறள்:- 986 - 990

தேவைக்கு அதிகமாய் மீந்துள்ள தண்ணீரைத்
தேவையின்றித் தேக்கிவைத்தால் தப்பு
....... புகாரி 2353

வழிந்தோடும் நீரை, வழிப்போக்கர் தீண்டும்
வழியைத் தடுப்பது தீது
.................... புகாரி 2357

வான்மழை மூலம் இறந்த நிலத்துக்கு
நல்லுயிர் தந்தான் அவன்
.................. குர்ஆன் 16:65

சூல்மேகம் கொண்டு;வான் நீரை அவன்தருவான்;
பாழ்செய்வாய் தேக்காமல் நீ
................ குர்ஆன் 15:22

தண்ணீரைக் கொண்டு மனிதரைச் செய்தான்-ஆம்
தன்நிகர் இல்லான் அவன்
................... குர்ஆன் 25:54

No comments: