இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 26, 2017

ஓவியம் : 2 ..... அவளதிகாரம் !



என்குறள் ; 1011 - 1015

கல்லில் இடித்துவிட்டு, மன்னிப்பும் கேட்டுவிடும்
பிள்ளைகுணம் யார்க்குவரும், செல்

கலங்குவோர் தானழுவார், ஆனால், கலங்கியது
இவ்வுலகு உன்அழுகை கண்டு

ஆறுதல் சொன்னால், அடைக்கலம் ஆகிவிடும்
அன்புக்கு அலையும் மனம்

’தன்னால் பிறர்கிழிவு கூடாது’ எனும்எண்ணம்
கொண்டோரைத் தான்சூழும் கேடு

மாறுதல் வேண்டுவோர்க்கு ஆறுதல் தந்தோர்பின்
’ஆண்டவன்’ வந்துநிற்பான் ஆம்

No comments: