என்குறள் ; 1011 - 1015
கல்லில் இடித்துவிட்டு, மன்னிப்பும் கேட்டுவிடும்
பிள்ளைகுணம் யார்க்குவரும், செல்
கலங்குவோர் தானழுவார், ஆனால், கலங்கியது
இவ்வுலகு உன்அழுகை கண்டு
ஆறுதல் சொன்னால், அடைக்கலம் ஆகிவிடும்
அன்புக்கு அலையும் மனம்
’தன்னால் பிறர்கிழிவு கூடாது’ எனும்எண்ணம்
கொண்டோரைத் தான்சூழும் கேடு
மாறுதல் வேண்டுவோர்க்கு ஆறுதல் தந்தோர்பின்
’ஆண்டவன்’ வந்துநிற்பான் ஆம்
Tweet | |||||
No comments:
Post a Comment