இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 6, 2017

முத்தமது....! முத்தம் அது......!!


முத்ததின வாழ்த்துகள் :))
துரைக்குறள் :- 971 - 975

இதழொன்றில் பக்கமிரண் டேதான் எனினும்
எழுதித்தான் தீராது அது

என்னில் அடங்கா உனைமடக்க நான்தருவேன்
எண்ணில் அடங்கா அளவு

செவ்வாயே ஆகாதென் போருமுண்டு; ஆனாலுன்
செவ்வாயே போதும் எனக்கு

வியர்க்காது உதடுக்கு எனினும் வியர்க்கவைக்கும்
என்பதுதான் இங்கு வியப்பு

’வரம்வேண்டும்’ என்பேன் ’தரவேண்டும் என்றால்
தரவேண்டும்’ என்பாள் அவள்

No comments: