உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை . இந்தப்பதிவுடன் என்குரலை, என்குறளாகப் பதிந்து 1000 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறேன் . குறள்விளக்கமாக ஒரு 1330 + இந்த 1000 + இன்னும் பதிவிடாமல் எப்படியும் ஒரு 1500 ., ஆகமொத்தம், ஏறக்குறைய, 4000 குறள்கள் என்னும் கணக்கில் (இப்போது :)இருக்கிறேன் .. இறையருளுக்கும், நட்பு வட்டத்துக்கும், இப்படி ஒரு முயற்சிக்குப் புள்ளிவைத்து ’உங்களால் முடியும் அண்ணே’ என்று வி(உ)தைத்து உந்தித் தள்ளிவிட்ட சகோ. பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும் எல்லாச் சிறப்புகளும் உரித்தாகுக !
996)
தாயே, உனைவாழ்த்தச் சொல்லில்லாச் சேயானேன்;
உன்மொழியால் சொக்கியதென் நாவு
997)
முறத்தால் புலியடித்தப் பெண்ணும், அறத்தால்
பசுகாத்த மண்ணும் எமது
998)
கணியன்பூங் குன்றன் கணித்தான் தனிநின்று
’யாவரும் கேளிர்’தான் என்று
999)
பாரதிரக் கூறுவேன் பாரதிதான் சாரதியாம்;
ஆதி அவன்தான் நமக்கு
1000)
முப்பதுக்கு ஓர்பாரதி; நூற்றி இருபதிப்போது;
எப்போது யார்வருவார் இங்கு
Tweet | |||||
No comments:
Post a Comment