இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 14, 2017

அச்சம் தவிர்.. !


1006)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


1007)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை


1008)
மிரட்சிக்கு இடம்கொடுத்தால் மாய்ந்து விடுமாம்
புரட்சித் தடம்பதிக்கும் வாய்ப்பு


1009)
அச்சம் வழியும் மனமுடையோர்க்கு உச்சம்
அடையும் வழியில்லை ஆம்


1010)
எதிர்பற்றிச் சிந்தித்து அடங்காது எதிர்கொண்டு
சந்திப்போர்க்கு உண்டு சிறப்பு

No comments: