1026)
பொட்டிட்டு கும்பிட்டக் காலம் வரை,மரத்தை
வெட்ட விடவில்லை நாம்
1027)
கோலத்தை, சாணியை, சூடத்தை, விட்டோரின்
காலத்தைச் சுற்றிஇன்று சீக்கு
1028)
ஆல்,வாகை, வேம்பு,அரசின் கீழிருந்த நாள்வரையில்
சுத்தமாய் விட்டிருந்தோம் மூச்சு
1029)
சுத்தமென்று பாட்டிலுக்குள் நீரை அடைத்தபின்பு,
பொத்தலாகிக் போனது வாழ்வு
1030)
தாதைவடி கட்டிவிட்டு, ஏதுமிலாத் தண்ணீரை,
தாதுநீர் என்கிறோம் இன்று
(தாதுநீர்=மினரல் வாட்டர்)
Tweet | |||||
No comments:
Post a Comment