இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 1, 2017

நீரா ? ... தண்ணீரா ??



1031)
நீர்சிக்க வைத்தேன் வலையொன்று; ’நீர்’சிக்கி
வீழ்த்தினீர் நீரின் சிறப்பு


1032)
மீன்என்றும் வேண்டாது நீர்வற்ற வேண்டுமென;
நானும் அதுபோலத் தான்


1033)
நீர்சூழ்ந்தால் வீணான மண்ணாகும் தீவு;என்னை
’நீர்’சூழ்ந்தால் நானாவேன் பூவு


1034)
’நீரில்லை’ என்றால்நான் யார்கூறு; நீரில்லை
என்றால் அதுஇல்லை ஆறு


1035)
நீர்தேங்கி நின்றாலும் ’நீர்’தங்கிச் சென்றாலும்
ஊர்சொல்லும் பாசமுண்டங்கு என்று

No comments: