இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 23, 2017

இயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்


1061)
கரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்
அதிகாலை மூன்று மணிக்கு


1062)
குயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை
நான்குமணி ஆன உடன்


1063)
நான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்
கூவும் பெருங்குரலில் ஆம்


1064)
காகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்
ஆகும் மணிஅப்போது ஐந்து


1065)
சரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்
போது மணிஆகும் ஆறு

2 comments:

மாதேவி said...

இயற்கை அலாரங்கள் அதிகாலையில் இனிமை.

duraian said...

மிக நன்றி