1036)
”ஏன்வேண்டும் ஏணி!” எனக்குமுன்,என் நட்பவன்
’நான்’என நிற்கும் பொழுது
1037)
மகிழ்வில் கலப்போரைக் காட்டிலும், உந்தன்
இகழ்வில்உடன் நிற்பதுதான் நட்பு
1038)
பங்கெடு நண்பன்வெல் லும்பொழுது, பங்குகொடு
தோற்றுஅவன் வாடும் பொழுது
1039)
ஏனென்றுக் கேட்டுப்பின் தீர்ப்பது தான்உறவு,
தீர்த்தப்பின் தான்கேட்கும் நட்பு
1040)
விருதுதரும் கையை விடமேலாம், தோற்கும்
பொழுதுதொடும் ஒற்றை விரல்
Tweet | |||||
No comments:
Post a Comment