இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 23, 2017

தாழ்வுமனம் தவிர்...!


1066)
’என்னடா வாழ்விது’ எனத்தாழும் எண்ணம்கொல்,
என்னுடைய வாழ்விதெனக் கொள்


1067)
என்ன முடியும் உனக்கென்போர் நாணக்கேள்,
‘என்ன முடியாது எனக்கு’


1068)
சாதிக்க வில்லையெனச் சோராதே, இன்றுலகில்
வாழ்வதே சாதனைதான் போ


1069)
எதனால் இழக்கிறாய் உன்தெம்பு, எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு


1070)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு,
வரம்கேட்டு நிற்பது எதற்கு

No comments: